Thursday, January 13, 2011

புற அழகு பொய்!
===================
என்னை எனக்காக இங்கே மதிக்கவேண்டும்!
என்னுடலில் மின்னும் நகைபார்த்து ஆடைபார்த்து
என்னை மதித்தால் வெறுப்பேன்!அகஅழகே
உண்மை! புறஅழகோ பொய்.

கூட்டை அழிக்காதே!
=========================
ஆக்கபூர்வ எண்ணத்தை அன்றாடம் உள்ளத்தில்
தேக்கும் நிலையெடுத்து நிம்மதியாய் வாழவேண்டும்!
வேற்றுமைக்கு வித்தூன்றும் அர்த்தமற்ற எண்ணங்கள்
கூட்டை அழித்துவிடும் கூறு.

வாழ்வின் வேர்!
=======================
முன்கோபம் கொள்ளாதே!உட்பகையைத் தேக்காதே!
புண்படுத்திப் பேசாதே! போக்கிழந்து போகாதே!
தன்னலத்தைப் போற்றாதே!வேதனையைத் தூவாதே!
பண்புகளே வாழ்க்கைக்கு வேர்.

அய்யோ!மனமே!
=================
கசக்கிப் பிழிந்து துவைத்த துணியை
கசக்கிக் கசக்கி முறுக்கிக் கிழிந்தும்
கசக்கிப் பிழிந்தால் துணியின் உயிரோ
கதறிச் சரிந்திடும் காண்.

0 Comments:

Post a Comment

<< Home