Thursday, January 13, 2011

பொல்லாத வாழ்வு!
======================
எல்லாம் இருந்தும் மனதிலே நிம்மதி
எள்ளளவும் இல்லாத வாழ்விலே என்னதான்
எல்லாம் இருந்தாலும் வாடவைத்துப் பந்தாடும்
பொல்லாத வாழ்வுதான்! சொல்.

சுமைகள் சுமையல்ல!
=============================
நமது சுமைகள் நமக்காகத் தானே!
நமது சுமைகளை மற்றவர் தோளில்
சுமத்த நினைப்பதோ என்றும் தவறு!
சுமைகள் சுமையல்ல என்றெண்ணி வாழ்ந்தால்
சுமைகள் வலிக்காது பார்.

புரியாத புதிர்!
==================
கண்களை மூடிப் பிறந்த பொழுதும்
உலகம் எனக்குப் புரியவில்லை!
கண்களைத் திறந்து வாழும் பொழுதும்
உலகம் எனக்குப் புரியவில்லை!
கண்களை மூடி இறக்கும் பொழுதும்
உலகம் எனக்குப் புரியாது!
பிறந்தது முதலாய் இறப்பது வரைக்கும்
புரியாப் புதிர்தான் இவ்வுலகம்.

1 Comments:

Blogger தமிழ் said...

புத்தாண்டு,பொங்கல் வாழ்த்துகள்

4:31 AM

 

Post a Comment

<< Home