Tuesday, February 22, 2011

நயமாய்ப் பேசுவோம்

========================
வரிசையாய் இங்கே எறும்புகள் செல்லும்!
ஒருவிரல் வைத்தே இடையூறு செய்தால்
திரும்பிச் சினந்தே கடிப்பதற்குச் சீறும்!
துரும்பின் அளவாம் எறும்புக்கே கோபம்
வருமென்றால் மாந்தர் பொறுமையைக் குத்திப்
புரட்டும் நிலைஎடுத்தால் அந்தப் பொறுமை
சரியும்!சரியும்! பகுத்தறிவு கூறும்
வரம்பையும் மீறி மறந்தே சினப்பார்!
பரபரப் பாகப் பழிச்சொல் சுமத்தி
அவப்பெயர் சூட்டும் அறிவிலிப் போக்கால்
சுவர்தான் எழும்பும்!உறவில் விரிசல்
பரவும்! அமைதியோ கானலாய் மாறும்!
நயமுடன் பேசப் பழகு.

0 Comments:

Post a Comment

<< Home