Wednesday, July 27, 2011

கருத்து மடல் 25.07.2011

எனது வசந்தம் கவிதைத் தொகுப்பு நூலுக்கு

திருக்குறள் மாமணி அருணா பொன்னுசாமி

அனுப்பியுள்ள கருத்து மடல் 25.07.2011
=========================================
பாராட்டுரை
=========================================
வெட்டாமல் ஏற்பட்ட கடலைப் போல
வேர்விட்ட யாப்பின்சீர் வெண்பா கண்டேன்;
தொட்டாலே இனித்திடுமா கரும்பு? பல்லில்
தொட்டிழுத்துக் கடித்தால்தான் சுவைக்கு மாபோல்
பட்டாடை கட்டிவந்த முல்லைப் பூவாய்ப்
பக்கமெலாம் படுத்திருக்கும் வெண்பா கண்டேன்1
விட்டுவிட மனமில்லை! பாபா ராஜே!
வெண்பாவின் புகழேந்தி, தம்பி என்பேன்!

குறள்மயங்கும் உரைவகுத்தீர்! தமிழ்ம யங்கும்;
கொண்டதொரு துணைவியாரின் மனம்ம யங்கும்;
அறம்மயங்கும், பொருள்மயங்கும்; காமம் என்னும்
அன்புபொதி சொல்மயங்கும் உரைவ குத்தீர்!
திறமையெலாம் உம்மிடத்தே மயங்கி நிற்கும்;
திசையெங்கும் மயங்குமிந்த வசந்தம் கண்டால்!
அற்புதமாய் வசந்தத்தை ஆக்கித் தந்தீர்!
அழகுநிலா மயங்குமிந்த நூலைக் கற்றால்!

இங்ஙனம்
அருணாபொனுசாமி
இயக்கம்:9500926939
இல்லம்:04324--248939
அலுவலகம்:04324--261968

0 Comments:

Post a Comment

<< Home