Monday, July 25, 2011

சமத்துவத்தின் தடைக்கல்!

==========================
சொத்துரிமைக்(கு) எல்லை வகுத்தாக வேண்டிய
கட்டாயம் உண்டானது நாட்டிலே! கண்டபடி
சொத்துக்கள் வாங்கிக் குவிக்கும் மனிதனுக்கோ
அத்தனையும் தேவையா? சொல்.

ஓடி உழைத்தாலும் ஓடுகூட மிஞ்சவில்லை!
கோடிகளில் வாழ்கின்றார் என்றும் உழைக்காமல்!
மாடிவீடு வீதிக்கு வீதியிங்கே வாங்குகின்ற்றார்!
தேடிவரும் விந்தையைச் செப்பு.

அனைவருக்கும் இங்கே அனைத்தும் கிடைத்தால்
மனிதருக்குள் வர்க்கபேதம் ஏற்படுமா?கண்ணே!
தனிமனிதன் சொத்தை அரசுடமை ஆக்கி
அனைவருக்கும் பங்குபோட்டுத் தா.

ஒருகுடும்பம் வாழ்வதற்குத் தேவையான பங்கை
சரிசமமாய்த் தந்துவிட வேண்டும் அரசு!
தரமான வாழ்க்கை அனைவருக்கும் கிட்டும்!
உலகமே போற்றும் உவந்து.

அரசியல் இன்றி நடுநிலையைக் காட்டு!
அலறவைக்கும் பேதத்தை இங்கிருந்து ஓட்டு!
உயர்த்திடுவோம் நம்நாட்டின் மாண்புதனை இங்கு!
வளரும் சமத்துவந்தான் பார்.

0 Comments:

Post a Comment

<< Home