Monday, December 12, 2011

தீவிரவாதி இங்கே! தண்டனை எங்கே?
======================================
கலப்படம் செய்து பொருள்களை விற்றுப்
பிழைப்பவன், மக்கள் உயிருடன் நாளும்
விளையாடும் அற்பன்! கொலைகாரன்! என்றே
அழைத்தேதான் த்ண்டித்தல் நன்று.

சட்டத்தின் பொந்துகளில் ஓடி ஒளிந்துகொண்டு
சட்டத்தைத் தன்பக்கம் அய்யோ! வளைக்கின்றான்!
இப்படிப் பட்டோரைத் தீவிர வாதியென
சற்றும் தயங்காமல் கூறு.

குழந்தைகள் உண்ணும் பொருள்முதல் நாட்டில்
பயன்படுத்தும் எல்லாப் பொருள்களிலும் நஞ்சைக்
கலப்பதுபோல் மூடன் கலப்படம் செய்கின்றான்!
கலப்படத்தைப் போக்குவது யார்?

அரசியலும், தேர்தலும், சாதிகளும் இங்கே
பயமின்றி சித்துவிளை யாட்டுகளை ஆடும்
களமாக நாட்டையே மாற்றியதால் தாயே!
கலப்படம் ஆள்கிறது பார்.

மக்களாட்சி மக்களைக் காப்பதற்கு மாறாக
மக்களை வாட்டி வதைகும் கலப்படத்தை
வெட்கமின்றி வாலாட்ட விட்டுவிட்டால் நம்பிக்கை
எப்படி வேரூன்றும் ? சொல்.

0 Comments:

Post a Comment

<< Home