Wednesday, December 07, 2011

அமைதியான வானமா இப்படி?
===================================
இடிமின்னல் மற்றும் புயல்மழையைத் தேக்கிப்
பிடித்துவைத்துக் காத்திருக்கும் வானம்!அதுவோ
விடியும் பொழுதும் இருட்டும் பொழுதும்
நடிக்கும் நடிப்பில் மயங்கிடும் நேரம்
வெடித்துப் புயலால், மழையால், இடியால்
அடித்தே உலகைப் புரட்டி எடுக்கும்
வெறியை உணர்ந்தால் அமைதியான வானம்
குடிவெறியால் கூத்தாட்டம் போடுதோ? என்றே
துடிக்கும் இதயம் மலைத்து.

0 Comments:

Post a Comment

<< Home