Saturday, December 03, 2011

தனிமை!
================
முதுமைப் பருவத்தில் நாளும் தனிமை
உறுதுணை யாதல் இயல்புதான் அம்மா!
பொறுமைச் சுமையைச் சுமந்து பழகு!
வெறுமை விலகிவிடும் காண்.

அசைபோட்டுப் பார்த்திருப்போம் நம்காலந் தன்னை!
அசைபோட்டுப் பேச அழைத்தால், பார்ப்பார்
பசைபோல் ஒட்டுவாரோ என்றே ஒதுங்கிக்
கடைதாண்டிச் செல்வார் நெளிந்து.

0 Comments:

Post a Comment

<< Home