Saturday, December 03, 2011

வேலி தாண்டாதே!
======================
ஆண்பெண் உறவுகள் அற்புத மானவை!
ஆண்பெண் இருவரும் நல்லொழுக்க வேலியைத்
தாண்டாமல் என்றும் பழகினால் நிம்மதி!
தாண்டினால் சீரழியும் வழ்வு.
===============================================

வாழக்கற்றுக்கொள்!
======================
மற்றவரைப் பார்த்துப் பெருமூச்சு விட்டேதான்
உற்றதுணை, சுற்றத்தை வாட்டி வதைக்காதே!
இப்பிறவி வாழ்வில் உனக்கென உள்ளவை
எப்படியும் வந்துசேரும் ! நம்பு.

தலைநிமிர்ந்து பர்த்தால் அனைத்தும் தெரியும்!
நிலைகுலைந்து போகாமல் உள்ளம் பொறாமை
அலைகளில் சிக்கித் தவிக்காமல் வாழ்ந்தால்
நிலையாகும் நிம்மதி தான்

இருப்பதை வைத்தே அமைதியாய் வாழ்ந்தால்
தருவாக வாழ்க்கை நிலைக்கும்! சினத்தை
நெருங்கவிட்டு நாளும் சிடுசிடுப்பில் வாழ்ந்தால்
கருகும் சருகாகும் வழ்வு.
========================================

0 Comments:

Post a Comment

<< Home