Saturday, November 19, 2011

ஏங்கும் வைகைதான் நான்!

=========================
நதிகள் அனைத்தும் கடலில் கலக்கும்!
நதிகளில் நானோ வைகை நதிதான்!
நதியாய் இருந்தும் கடலில் கலக்கும்
கதியைப் பெறவில்லை! தாயே! அதனால்
மடிதேடும் குழந்தையைப் போல நகரில்
நதியாக ஊர்ந்து வருகின்றேன்! தண்ணீர்
அடித்து வரும்போது ஊரும் தழைக்கும்!
மகிழ்வார் ! மனதார வாழ்த்துவார் மக்கள்!
கசிந்துருகிக் கண்மாயில் சேர்ந்திடுவேன் நானும்!
சகித்துக் கலந்தேதான் மேனி குளிர்வேன்!
வடிந்திருப்பேன் த்ண்ணீர் வறண்டதும்! ஏக்கப்
பிடியில் நகர்கிறது வாழ்வு.

0 Comments:

Post a Comment

<< Home