Sunday, November 13, 2011

கடலை நாடும் நதி

=====================
வாழ்க்கை நதியோ வழக்கமாகப் போவதுபோல்
நீரோட்டம் செல்லும் திசையெல்லாம் சென்றது!
வாழ்வில் துணைநதி வந்ததும் அர்த்தமுடன்
நீரோட்டம் ஓடியது! காலம் கிளைகளைச்
சேர்த்தது! நீரும் திசைமாறித் துள்ளியது!
சீராகச் சென்றநதி தங்குதடை கொண்டுவந்த
பாரத்தைத் தாங்கித்தான் தள்ளாடி சோர்ந்தது!
காலமே! மூலநதி மற்றும் துணைநதியை
ஆவலுடன் என்று கடலில் கலக்கவைப்பாய்?
ஊரறிய சொல்வாயா நீ?

0 Comments:

Post a Comment

<< Home