Sunday, November 06, 2011

வளையக் கற்றுக்கொள்!

============================
மற்றவரை நாமோ வளைக்க முடியாது!
உற்றவளே என்றாலும் நாம்தான் வளையவேண்டும்!
கற்றதெல்லாம் காற்றில் சருகாய்ப் பறந்துவிடும்!
பற்றைக் களைதல் அறிவு.

எவர்மீதும் பற்று வலைவீசி வாழும்
தவறைத் தவிர்த்தலே நன்று -- வலையுன்னைச்
சுற்றி வளைத்துவிடும்! தத்தளித்துச் சிக்கவைகும்!
பற்றற்று வாழப் பழகு.

0 Comments:

Post a Comment

<< Home