Saturday, December 03, 2011

மலராய் இரு!
==============
பறிக்கப் பறிக்கக் கலக்கமே இன்றிச்
செடியில் மலர்கள் மலர்ந்தன மீண்டும்!
இடிக்கும் துயரில் கலங்கும் மனிதா!
செடியில் மலராய் இரு.
=======================================
பூபாளம் கேட்குமா?
=======================================
குடித்துக் குடித்தே உருக்குலைந்தார் அப்பா!
அடிவாங்கி வாங்கி உருக்குலைந்தார் அம்மா!
படிக்க மனமிருந்தும் வாய்ப்பில்லை! நானும்
படிக்கவில்லை!காப்பவர் யார்?

காக்கும் இறைவனுக்கோ பார்த்தும் கருணையில்லை!
காக்கும் அரசுக்கும் கண்திறக்க நேரமில்லை!
காற்றடிக்கும் திக்கிலே வாழ்க்கை பறக்கிறது!
மாற்றத்தைக் காலமே! காட்டு.
===============================================

கலங்காதே!
============
கலங்கா திருப்பாய் மனமே! கலக்கம்
சலசலக்க வைக்கும்! நடுங்கவைக்கும்! ஆனால்
கலக்கத்தை நீயோ கலங்கிநிற்கச் செய்தால்
கலக்கம் கழன்றோடும் காண்.
=======================================

காலமே வழிகாட்டி!
=====================

காலம் வழிகாட்டும்! சற்றும் கலங்காதே!
காலம்தான் உன்னை வழிநடத்திஸ் செல்கிறது!
தோளுயர்த்து! சோர்வைப் புறக்கணித்துத் தூக்கியெறி!
காலம் கனிந்துவரும் காண்.
==========================================

0 Comments:

Post a Comment

<< Home