Tuesday, February 28, 2012

சுமையை இறக்கு!
=================
உள்ளம் சுமையின் சுழலில் தவிக்கிறதா?
கள்ளமின்றிப் பேசிச் சுமையை இறக்கிவிடு!
அல்லல் துடிப்படங்கும்! நெஞ்சம் அமைதியுறும்!
நல்மருந்து இஃதே உணர்.
===============================================

மக்களாட்சி!==============
மின்சாரம் மற்றும் அடிப்படைத் தேவைக்குக்
கண்டனக் கூட்டங்கள், உண்ணா விரதங்கள்
எங்கும் மறியல்கள் என்றேதான் மக்களெல்லாம்
பொங்கி எழுகின்றார் பார்.

அரசியல் வண்ணத்தைப் பூசி மெழுகி
அரசை நடத்துவோர் தப்பிக்க எண்ணும்
வழக்கத்தை மாற்றியே சிக்கலுகுத் தீர்வை
வழங்குவதே மக்களாட்சி! சொல்.

0 Comments:

Post a Comment

<< Home