Wednesday, February 29, 2012

பகுத்தறிவைப் பயன்படுத்து!
==========================
சொல்பவர் யாரென்று பார்க்காமல், சொல்வது
நல்லதா? கெட்டதா? என்றேதான் பார்க்கவேண்டும்!
நல்லதை ஏற்றுக்கொள்! கெட்டதை ஏற்காமல்
தள்ளிப் புறக்கணித்தல் நன்று.
===============================================

அளவுகோலை மாற்று.
=======================
நற்பண்புக் கொண்டோரை மேலோர்கள் என்றுரைப்போம்!
அற்பகுணங் கொண்டோரைக் கீழோர்கள் என்றுரைப்போம்!
நற்றமிழே! சாதிமதப் பின்னணியைப் பார்க்கின்ற
அற்ப அளவுகோலை மாற்று.
===================================================

0 Comments:

Post a Comment

<< Home