Sunday, October 26, 2014

அனைவரும் கண்டுகொள்ளாதது ஏன்?
(அரசியல் வாதிகள் உள்பட)
----------------------------------------------------------------------
வண்டிகளில் மாடுகளைப் பூட்டிச் சுமைகளைக்
கண்டபடி ஏற்றும் கொடுமைபோல்--இங்கே
சுமக்க முடியாமல் புத்தகத்தைத் தோளில்
சுமக்கின்றார் பிள்ளைகள் பார்.

அரசாங்கம், பள்ளிகளின் நிர்வாகம் எல்லாம்
அலட்சியம் காட்டுகின்றார்! தளிரின் முதுகு
வளைந்துவிடும் என்னும் மருத்துவர் சொல்லை
விளையாட்டாய் எண்ணுவதும் ஏன்?

0 Comments:

Post a Comment

<< Home