Tuesday, April 28, 2015

வதந்தீ!
------------------------
கருப்பாக வாந்தி எடுத்ததாய்ச் சொன்னார்!
கருங்காக்கை போல்நிறத்தில் என்றார் ஒருவர்!
கருநிறக் காக்காவாய் வாந்தியென்று சொல்லி
ஒருவர் முடித்தார் வியந்து.

நேரடியாய்ச் சொன்னால் சொல்பவரும் கேட்பவரும்
ஓரணியில் நின்று புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கும்!
யாரிடமோ சொல்லிவிட ஊர்வலம் சென்றேதான்
வேரிடத்தில் போகும் நிலையிலே  இப்படித்தான்!
நேரடியாய்ச் செய்தியைச் சொல்.

0 Comments:

Post a Comment

<< Home