Monday, June 01, 2015

ஏனிப்படி?
--------------
நிம்மதி இல்லாத வாழ்க்கை என்றும்
நிம்மதி இல்லாத வாழ்க்கை

என்ன நடக்குது இங்கே ஒன்றும்
புரியவில்லை
எதற்கு நடக்குது இங்கே அதுவும்
தெரியவில்லை

நடப்பதைத் தடுக்கும் அறிவுரையால்
தடுக்கவும் முடியவில்லை
நடக்கட்டும் என்றே சும்மா வேடிக்கை
பார்க்கவும் முடியவில்லை

வாழ்க்கை என்பது இதுதானா?
வேதனை என்றும் நிலைதானா?

வாழத்தானே பிறந்துவிட்டோம்
வாழ்ந்தே காட்டிடுவோம்
கோழைத் தனமாய் ஓடாமல்
சோதனையின் கொம்பொடிக்க வழிகாண்போம்!

0 Comments:

Post a Comment

<< Home