Sunday, May 31, 2015

மணநாள் 40 ஆண்டு நிறைவு
29.05.1975-- 29.05.2015
-------------------------------
இல்லறத்தில் நாற்பதாம் ஆண்டுதனை நாங்கள்
உள்ளம் மகிழ நிறைவுசெய்து வாழ்கின்றோம்!
நல்லறத்தைக் காத்தேதான் நாளும் வளர்கின்றோம்!
நல்வாழ்த்தே என்றும் துணை.

எங்கள் மகளாய் சுபாதேவி மற்றும்
எங்கள் மகனாய் எழிலரசன் பெற்றோம்!
அன்புக் குழந்தைகள் ஆற்றலுடன் வாழ்கின்றார்
எங்களுக் கிமையானார் இன்று.

மகளின் கணவர் பெயரோ ரவிதான்
கடமைப் பொறுப்போ மருத்துவ வேலை
அகங்குளிர மைந்தன் சுசாந்த்சிரி ராமும்
குடும்பமாக வாழ்கின்றார் இங்கு.

மகனின் மனைவியாய் சத்திய பாமா
கடமைப் பொறுப்போ கணினித் துறையில்
அகங்குளிர மைந்தர்  நிகிலும் வருணும்
குடும்பமாக வாழ்கின்றார் இங்கு..

முத்துத் தமிழ்போல மூன்று பேரன்கள்
ஒட்டி உறவாட காலம் கரைகிறது
இத்தகைய வாழ்க்கை அமைந்திருக்கும் இன்பத்தில்
நற்றமிழ்போல் வாழ்கின்றோம் பார்.

எங்கள்  குடும்பம் இனிய குடும்பந்தான்
எங்கள் குடும்பம் உழைக்கும் குடும்பந்தான்
இங்கே படிப்படியாய் நாள்தோறும் முன்னேறும்
பண்புதான் எங்கள் சிறப்பு.

மதுரை   பாபாராஜ்
வசந்தா பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home