Tuesday, September 29, 2015

செய்தியும் கவிதையும்!
இந்து தமிழ் 29.09.15
-----------------------------------------------
துருவப் பனிமலைகள் வேகமாக நாளும்
உருகத் தொடங்கி கடல்மட்டம் இங்கே
பெருகி உயரும் பதினைந்து மீட்டர்!
கருத்தைப் படித்தால் துடிக்கிறது நெஞ்சு!
உருமாறிப் போகும் உலகு.

கடலோர நாடுகளும் தீவுகளும் மூழ்கி
அடையாளம் இன்றி அழிந்துவிடும் என்ற
விடையை நினைத்தால். வெப்பமய மாக்கும்
நடைமுறைக்குக் காரணமும் நாம்.

0 Comments:

Post a Comment

<< Home