Tuesday, September 01, 2015

துரியோதனண்---கர்ணன்
   யார் வள்ளல்?
-------------------------------------
திருமணம் நாளை, சமைத்திட வேண்டும்!
தருவீர் விறகென்றான் ஏழை ஒருவன்!
பெருமழைக் காலம் விறகில்லை என்றே
தரவில்லை அங்கே துரியோ தனன்தான்!
தளராமல் ஏழையோ கர்ணனிடம் கேட்டான்!
தயங்காமல் உத்திரத்தை வெட்டிக் கொடுத்தான்!
உலகில் மனமிருந்தால் மார்க்கமுண்டு! வள்ளல்
தரணியில் கர்ணன்தான்!  சாற்று.

0 Comments:

Post a Comment

<< Home