Tuesday, September 29, 2015

அன்றும் இன்றும்!
.----------------------------------
முன்பு அலுவலக நேரம் முடிந்தேதான்
மங்குகின்ற மாலைப் பொழுதிலே தாய்தந்தை
வந்தால் குழந்தைகள் சூழ மகிழ்ந்திருப்பார்
இன்றிங்கே வீட்டுக்கு வந்தும் அலுவலகத்
தின்பணியை வீட்டில் தொடரும் அவலநிலை!
தங்கள் குழந்தைகள் ஏக்கத் துடனிங்கே
நின்றே மிரள்கின்றார் பார்.

0 Comments:

Post a Comment

<< Home