Wednesday, November 18, 2015

திரு.ரமணன் மேல் குற்றமில்லை!
--------------------------------------------------------------
கடலில் புயற்சின்னம் பார்த்துக் கணித்துப்
படமெடுக்கும் மாமழை என்பார்! ரமணன்!
நகர்ந்திடும் மேகங்கள் ஏமாற்றிப் போனால்
பகர்ந்தவர் குற்றமில்லை பார்.

அந்தப் பொறுப்பிலே அங்கிருந்து சொல்லவேண்டும்!
எந்த மனிதரும் வேண்டுமென்றே சொல்லமாட்டார்!
சொன்னதை மீறி இயற்கையே மாறினால்
சொல்வோர் பொறுப்பா? இயம்பு.

0 Comments:

Post a Comment

<< Home