Thursday, November 26, 2015

தமிழில் மயங்கிய நதி

தமிழில் மயங்கிய நதி
-------------------------------------------
நதிகள் அனைத்தும் கடலிலே சேரும்
மதுரையின்  வைகையோ சங்கத் தமிழில்
மதிமயக்கங் கொண்டு கடலை மறந்து
முடிந்தது தென்பாண்டி நாட்டில்! வைகை
நதியோ கடல்கலக் காது.

மதுரை பாபாராஜ்

வைகை நதியோ
    கடல்கலக் காது
பாபா கவிக்கு
    நிகரிருக் காது.

கனியன் கிருஷ்ணன்
09.12.21

இலக்கியக் காரணம்
--------------------------------------
www.eegarai.net
----------------------------------------
பாற்கடலோ நஞ்சைச் சிவனுக்குத் தந்ததாலே
வேற்றுமை கொண்டே  வைகை நதியிங்கே
ஊற்றெடுத்தே ஆடும் அலைகடலில் சேராமல்
பாத்தமிழ்ப் பாண்டிநாட்டின் எல்லைக்குள் வாழ்கிறதாம்!
கூத்தருக்கு சொன்னார் புகழேந்தி என்றேதான்
நாற்றுநடும் செய்தியொன்று உண்டு

0 Comments:

Post a Comment

<< Home