Thursday, November 26, 2015


மழையே தத்தளிக்க வைக்காதே
------------------------
உணவைத் தருகின்றாய்! நீயே பருகும்
உணவாக மாறுகின்றாய்! எங்களை இன்றேன்
உணவுக்கே தத்தளிக்க வைத்தாய்? மழையே!
மனம்நொந்து கேட்கின்றோம் கூறு.

ஏரியில் வீடுகட்ட வில்லை! அடுக்குமாடி
மாளிகையில் நாங்களில்லை! இங்கே நடுத்தெருவில்
வாழ்க்கையில் தத்தளிக்கும் ஏழைகளாய் வாழ்கின்றோம்!
சேரியை நீயோ அழித்தேதான் செல்கின்றாய்!
பாவமென்ன செய்தோம்? விளம்பு.
-------------

0 Comments:

Post a Comment

<< Home