Wednesday, December 30, 2015

கொடுமை!
--------------------------
தன்பிள்ளை ஏக்கமுடன் நின்றே வழியனுப்ப
அம்மா, அடுத்தவீட்டுப் பிள்ளையைப் பார்ப்பதற்கு
நெஞ்சம் துடிதுடிக்க சென்றிருக்கும் ஏழ்மையை
வன்கொடுமை என்றேதான் சாடு.

வறுமைத் தணலில் தகித்திடும் வாழ்க்கை
வெறுமையை நோக்கிச் சிறகை விரிக்கும்!
பொறுமை கடலினும் பெரிதெனச் சொன்னால்
உறுத்தாதா நம்முள்ளம்? சொல்.

0 Comments:

Post a Comment

<< Home