Tuesday, March 22, 2016

கப்சிப் காராவடை

கப்சிப் காராவடை!

பொங்கலத்தான் கிண்டிவச்சேன்
நடுவுலத்தான் பாத்திகட்டி
சாம்பாரை ஊத்திவச்சேன்
அப்படியே பெசஞ்சாக்க
வாசந்தான் வாசந்தான்
எட்டுதிக்கும் வாசந்தான்
வாசமுன்னா அம்புட்டு
வாசந்தான் ஏவூட்ல

வாசத்த புடிச்சேதான்
ஏமாமன் வந்தாரு
வந்தவர வாசமிங்கே
கொண்டுவந்து சேத்துருச்சு

என்னபாத்து சிரிச்சாரு
அவரபாத்து நாஞ்சிரிச்சேன்
கண்ணால பாத்துபாத்து
வயிறுவலிக்க சிரிச்சுபுட்டோம்

அந்த நேரம் பாத்தேதான்
அப்பாஅம்மா வந்தாங்க
வந்தத்தா நாங்கபாத்தோம்
பாத்ததுமே

கப்புசிப்பு காராவடை!

0 Comments:

Post a Comment

<< Home