Thursday, November 10, 2016

Rivers don't drink water....They flow & carry..!!
No prejudice on who drinks it.

Trees don't eat fruits..!!  They bear & give ...
No prejudice on who eats it.

Clouds don’t bath...They shower...
No prejudice on whom or where to shower.
So, let's perform our KARMA knowing nothing is ours...except to play our role !!!

இயற்கையைப்பார்

( மொழிபெயர்ப்பு)

நதிகளோ நீரைக் குடிப்பதில்லை! நாளும்
துடித்தே சுமந்துசெல்லும்! யார்குடிப்பார் என்று
நொடிப்பொழுதும் எண்ணுவதில்லை! ஆனால்
கடமையைச் செய்யும் களித்து.

மரங்கள் கனிகளை உண்பதில்லை! நாளும்
தவறாமல் தானே சுமந்துநிற்கும்! இங்கே
எவருண்பார் என்றெண்ணம் இன்றி, கடமை
முயற்சியில் வாழ்கிறது பார்.

கார்முகில் வான்மழையை இங்கே பொழிகிறது!
யாருக்கோ எவ்விடமோ என்றேதான் பார்ப்பதில்லை!
சார்பின்றித் தன்கடமை தன்னைப் பருவத்தில்
ஆர்வமுடன் செய்கிறது பார்.

நாம்நம் கடமையை நாள்தோறும் செய்திடுவோம்!
ஏங்காமல் என்ன வருகிறதோ ஏற்றுவாழ்வோம்!
 தேங்கும் எதிர்பார்ப்பைத் தூக்கி எறிந்திடுவோம்!
தேனகமாய் மாறும் அகம்

0 Comments:

Post a Comment

<< Home