Thursday, November 10, 2016

பாப்பாப்பாடல்

பாப்பாப் பாடல்

காகமும் தாகமும்

காகம் ஒன்று வந்தது
தாகம் வாட்ட நின்றது

குடத்தை அங்கே கண்டது
தாகம் தீர்க்க நினைத்தது

குடத்தை எட்டிப் பார்த்தது
தண்ணீர்  அடியில் இருந்தது

அருகில் கிடந்த கற்களை
ஒவ்வொன் றாக குடத்திற்குள்

அலகால் கவ்விப் போட்டது
தண்ணீர் மேலே வந்ததும்

தாகம் தீர குடித்தது
மீண்டும் பறந்து சென்றது

0 Comments:

Post a Comment

<< Home