Tuesday, November 14, 2017

மழைதருமோ

மழைதருமோ இம்மேகம்?
சொல்வாயா செந்தமிழே?
வான்பார்த்து வாழ்கின்றோம்!
வான்பொழிந்தால் இன்பு றுவோம்!

பெய்தமழை போதாதே!
பொய்த்துவிட்டால் தாங்காதே!
உள்ளமெல்லாம் தாகந்தான்
உடனேநீ பொழிந்துவிடு!

கூடுகின்ற மேகமே
கூடிப் பொழிந்துவிடு!
ஓடுகின்ற மேகமாய்
கூடித்தான் கலையாதே!

நாள்தோறும் ஏங்குகிறோம்!
நல்லமழை தந்துவிடு!
நீர்நிலைகள் நிரம்பட்டும்!
நிம்மதியோ நிலைக்கட்டும்!

0 Comments:

Post a Comment

<< Home