Saturday, November 04, 2017

VOV

VOICE OF VALLUVAR

வள்ளுவர் குரல் குடும்ப  நண்பர்
இராமசாமி அவர்களுக்கு
மணிவிழா வாழ்த்துப்பா!

03.11.2017

 
                           இவருக் கறுபதா? என்றே வியக்கும்
                           உருவம் இளமைப் பொலிவில் மிளிர
                          அருமை இராமசாமி வாழ்க வளர்க!
                          அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

                          திருக்குறள் வித்தகர்! நட்பிலே தென்றல்!
                          பெருந்தன்மைப் பண்பிலே அன்பின் சிகரம்!
                          பெரும்புகழ் பெற்றுக் குடும்பத்தார் சூழ
                          பெருமையுடன் வாழியவே நீடு.

                         வாழ்க்கைத் துணைவியின் மங்கல மாட்சியில்
                         நாள்தோறும் இல்லறம் இங்கே மணங்கமழ
                         வாழ்வாங்கு வாழியவே! பல்வளங்கள் சூழ்ந்திருக்க
                         ஆல்போல் வாழ்க தழைத்து.

0 Comments:

Post a Comment

<< Home