Saturday, April 21, 2018


இனியவை நாற்பது

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்

பாடல் 18

மன்றில் முதுமக்கள் வாழும் பதி இனிதே
;தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பு இனிதே;
எஞ்சா விழுச் சீர் இரு முது மக்களைக்கண்டு
எழுதல் காலை இனிது.
-------------------------------------------------------------------------------
அறிஞர்கள் வாழ்கின்ற ஊரிலே வாழ்தல்
அடிக்கரும்பு போல இனிதாம்! அறநூல்
நெறியிலே வாழும் முனிவர் பெருமை
குறிஞ்சி மலைத்தேன் போலினது பெற்றோர்
அடிதொழக் காலைப் பொழுதிலே காணும்
மகிழ்ச்சி உணர்வே இனிது.

0 Comments:

Post a Comment

<< Home