Saturday, April 28, 2018

பாடல் 24

வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு இனிதே;
ஒல்லும் துணையும் ஒன்று உய்ப்பான் பொறை இனிதே;
இல்லது காமுற்று, இரங்கி இடர்ப்படார்
செய்வது செய்தல் இனிது.
-------------------------------
பண்பை உயர்த்த, சினமின்றி வாழ்பவன்
கொண்ட தவமோ இனிதாகும்! மேற்கொண்ட
தன்பணி தன்னை நிறைவேற்றக் காட்டுகின்ற
வன்மை உடையோன் பொறுமை இனிதாகும்!
தன்னிடம் இல்லாப் பொருளை நினைக்காமல்
துன்பம் தவிர்த்தல் இனிது.
--------------------------------------

0 Comments:

Post a Comment

<< Home