Sunday, April 22, 2018


இனியவை நாற்பது

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்


பாடல் 22

வருவாய் அறிந்து வழங்கல் இனிதே;
ஒருவர் பங்கு ஆகாத ஊக்கம் இனிதே;
பெரு வகைத்து ஆயினும், பெட்டவை செய்யார்,
திரிபு இன்றி வாழ்தல் இனிது.
----------------------------------------------------------------------------------------------
ஈட்டும் வருமானம் பார்த்தே மற்றவர்க்கு
ஈத்துவக்கும் பண்பே இனிது! சமுதாயம்
தூற்றும் ஒழுக்கத்தை ஏற்காமல் வாழ்வதே
ஏற்றத்தைக் காணும் இனிது! யானையை
ஆற்றலுடன் வைத்திருந்த போதும் கடிவாளம்
போட்டேதான் தன்னியல்பு மாறாமல் வாழ்தல்
கூட்டும் மதிப்பே இனிது!

0 Comments:

Post a Comment

<< Home