Saturday, April 21, 2018

இனியவை நாற்பது

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்

பாடல் 19

நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனி இனிதே
;பட்டாங்கு பேணிப் பணிந்து ஒழுகல் முன் இனிதே
;முட்டு இல் பெரும் பொருள் ஆக்கியக்கால்
மற்றுஅதுதக்குழி ஈதல் இனிது.
------------------------------------------------------------------------------------
நண்பரைப் பற்றிப் புறங்கூறும் வக்கிரம்
இன்றி இருத்தல் இனிது! நடிக்காமல்
உண்மையைப் போற்றியே வாழ்தல் இனிதாகும்!
மண்ணக வாழ்வில் பொருள்களைச் சேர்த்தேதான்
அன்புடன் தக்கவர்க்கோ ஈதல் இனிதாகும்!
பண்பகமாய் வாழப் பழகு.

0 Comments:

Post a Comment

<< Home