Sunday, April 22, 2018

இனியவை நாற்பது

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்

பாடல் 21

பிறன்கைப் பொருள் வெளவான் வாழ்தல் இனிதே
;அறம்புரிந்து, அல்லவை நீக்கல் இனிதே
;மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்திறம்
 தெரிந்து வாழ்தல் இனிது.
---------------------------------------------------------------------------
உனக்குரிமை இல்லாப் பொருளைப் பறிக்கும்
தினவின்றி வாழ்தல் இனிதாகும்! என்றும்
மனக்கருணை கொண்டே அறம்செய்து  தீமை
தனைநீக்கல் நாளும் இனிதே! அறிவின்
மணமறியாப் பேதை உறவை அகற்றக்
கணித்தேதான் சேராமல் வாழ்தல் இனிது!
மனமாசை நீக்கல் அறிவு.

0 Comments:

Post a Comment

<< Home