Saturday, April 21, 2018



இனியவை நாற்பது

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்

பாடல் 20
சலவரைச் சாரா விடுதல் இனிதே ;
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே;
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க்கு எல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது.
---------------------------------------------------------------------------------
வஞ்சகரை என்றும் தவிர்த்தல் இனிதாகும்!
பண்பகமாய் வாழும் அறிஞர் அறவுரையைப்
பின்பற்றிப் போற்றுதல் வாழ்வில் இனிதாகும்!
மண்ணகத்தில் வாழும் உயிர்கள் உரிமையுடன்
அஞ்சாமல் வாழ்தல் இனிது

0 Comments:

Post a Comment

<< Home