Sunday, April 22, 2018


இனியவை நாற்பது

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்

பாடல் 23

காவோடு அறக் குளம் தொட்டல் மிக இனிதே;
ஆவோடு பொன் ஈதல் அந்தணர்க்கு முன் இனிதே
;பாவமும் அஞ்சாராய், பற்றும் தொழில் மொழிச்
சூதரைச் சோர்தல் இனிது.
-----------------------------------------------------------------------------------------------
சோலை அரவணைக்கும் நீர்க்குளத்தை வெட்டுதல்
காலமெலாம் வாழ இனிதே! அறச்சான்றோர்
வாழ பசுவுடன் பொன்னளித்தல் தேனினிது!
கோழைக் கயவராகி சூதாடும் கும்பலை
பாலைமனப் பித்தரை நீக்கல் இனிதாகும்!
தூயமனம் சான்றோர் மனம்.

0 Comments:

Post a Comment

<< Home