Saturday, April 28, 2018


இனியவை நாற்பது

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்

பாடல் 25

ஐ வாய் வேட்கை அவா அடக்கல் முன் இனிதே
;கைவாய்ப் பொருள் பெறினும்,
 கல்லார்கண் தீர்வு இனிதே;
நில்லாத காட்சி நிறை இல் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது.
-------------------------------------
அய்ம்புலனின் ஆசை தவிர்த்தல் இனிதாகும்!
பல்வளம் வந்தாலும்பொல்லாதார் கூட்டுறவைத்
தள்ளிவைத்தல் என்றும் இனிதாகும்! இவ்வுலகம்
கல்வெட்டாய் நின்று நிலைக்குமென்பார் நட்பிற்குப்
புள்ளிவைத்தல் இங்கே இனிது.

0 Comments:

Post a Comment

<< Home