Saturday, April 28, 2018


இனியவை நாற்பது

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்

பாடல் 26

நச்சித் தற் சென்றார் நசை கொல்லா மாண்பு இனிதே
;உட்கு இல்வழி, வாழா ஊக்கம் மிக இனிதே
;எத் திறத்தானும் இயைவ கரவாத
பற்றினில் பாடயங்கு இனியது இல்.
------------------------------------
நற்பொருளை நாடி உதவிசெய்ய வேண்டிநின்றால்
உற்றதுணை யாகி நிறைவேற்றும் பாங்கினிது!
சற்றும் மதியாதா ரையொதுங்கி வாழ்கின்ற
அக்கறை கொண்டுவாழும் உள்ளம் இனிது!
மற்றவர்க்கு ஈயும்  பொருளை மறைக்காத
அற்புத உள்ளம் இனிது.

0 Comments:

Post a Comment

<< Home