Saturday, April 28, 2018



இனியவை நாற்பது

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்

பாடல் 27

தானம் கொடுப்பான் தகை ஆண்மை முன் இனிதே;
மானம் பட நஞவரின் வாழாமை முன் இனிதே
;ஊனம் கொண்டாடார், உறுதி உடையவைகோள்
 முறையால் கோடல் இனிது.
---------------------------------

கொடைமனம் கொண்டோர்  பெருமை இனிது!
கறைபடிந்து மானம் இழக்காமல் வாழும்
முறையான வாழ்க்கை இனிதாகும்!குற்றம்
குறைகளை மற்றவர்மீது சுமத்தாத பண்போ
நிறைவைக் கொடுக்கும் இனிதாம்! உணர்!
முறையாக நல்லதைப் பெற்றேதான் வாழ்தல்
நிதமும் இனிதுதான் சொல்.

0 Comments:

Post a Comment

<< Home