Thursday, September 27, 2018

நாய்களைக் காணோம்!

(எங்கள் தெருநாய்கள் காணவில்லை)

நாய்கள் தெருவிலே ஒற்றுமையாய்க் கூடிவாழும்!
யாரேனும் அன்னியரோ வண்டிகளோ வந்துவிட்டால்
பார்த்தேதான்  ஓடிவந்து சேர்ந்தே குரைத்திருக்கும்!
வாசல் படிகளில் சேர்ந்து படுத்திருக்கும்!
யாரேனும் ரொட்டிகள் போட்டால் வாலாட்டும்!
ஊரில் தெருநாய்கள் என்றே பெயரேந்தும்!
யாரறிவார்? காணவில்லை யே!

நாய்வண்டி வந்தே பிடித்ததுவோ? நாய்களுக்குள்
வாய்ச்சண்டை வந்தே குதறியதால் ஓடினவோ?
பாய்ந்துவரும் நாய்க்கூட்டம் காணலையே! காணலையே!
யாரேனும் சொல்வாரோ இங்கு.

0 Comments:

Post a Comment

<< Home