Thursday, August 09, 2018

கலைஞரே! புன்னகை ஓவியமே!

தமிழும் தமிழ்கூறும் நல்லுலகும்  இங்கே
தணியாத சோகத்தில் தத்தளிக்கும் காட்சி
மனத்திரையில் ஓடி மயங்கிட வைக்கும்!
மனமே துணிச்சலைத் தா.

கலைஞரே! புன்னகை ஓவியமே! எங்கே?
தழைக்கும் கவிதையே! செந்தமிழே! எங்கே?
சளைக்காத பேருழைப்பு நாயகனே! எங்கே?
முழங்கும் தமிழ்க்கடலே! நீ.

அன்பகமே! பண்பகமே! ஆருயிரே! எங்குசென்றாய்?
மண்ணகத்துச் சோதனையின் கொம்பொடித்தால் சாதனை
என்றவரே! வேதனையைத் தந்துவிட்டே எங்குசென்றாய்?
கண்விழித்துப் பார்ப்பாயா? நீ.

மெரினாவில் கலைஞர்.

வரலாற்று நாயகனைச் சந்தனப் பேழை
மலர்விழிகள் மூட சுமந்துவந்த கோலம்
கலைஞரை என்றுகாண்போம் என்னும் ஏக்கம்
சுரக்கச் செய்கிறதே பார்.

ஓய்வறியாச் சூரியனே ஒவ்வொரு காலையிலும்
கீழ்வானில் சூரியனைப் பார்க்கும் பொழுதெல்லாம்
ஆழ்மனதில் உன்னுருவம் வந்துநிற்கும்! ஆருயிரே!
தாள்பணிந்தேன் அஞ்சலி தந்து.

0 Comments:

Post a Comment

<< Home