Sunday, February 17, 2019

அம்மாவின் நினைவு நாள்



என் அம்மாவின் நினைவுநாள்!

திருமதி. தேவகி முத்துசுப்பு

14.02.2019

"இன்னும் தயவு வரவில்லையா?
உனக்கென் மீது என்னவர்மம் சொல்லையா"!

என்று கசிந்துருகி கண்ணீர் மல்க
பாடுவாயே!
அந்தக் கணீர் குரலை மீண்டும் கேட்பேனா?
முடியாது எனத் தெரிந்தும் விரும்புகிறேனே!

நீ இருந்த போதே எனது கவிதை
நூல் வெளியீட்டில் கலந்துகொண்டாய்!
என்மகன் கவிராஜன் என்று மற்றவர்கள்
சொல்கின்றார் பெருமைதான்
என்று அன்று நீ சொன்னது என் செவிகளில் இன்றும் எதிரொலிக்கிறது அம்மா!
இதுதான் எனக்குக் கிடைத்த உயர்ந்த
விருது அம்மா!

எல்லாம் இருக்கிறது! எல்லோரும் இருக்கின்றோம்!
ஆனால் நீ?
இல்லையே எங்களுடன்!
காலக் கொடுமை!

உன்னை மனத்தால் வணங்குகிறோம் அம்மா!

என்றும் உன் நினைவுடன்
உன் மகன்
பாபாஜி
உடன் வணங்கும்
மருமகள் வசந்தா
மற்றும் குடும்பத்தார்

0 Comments:

Post a Comment

<< Home