Friday, July 26, 2019

திருக்குறள்
வெண்பாப் பாங்கில்
 இன்பத்துப்பால்
---------------------- --------   
எனது முயற்சி எண் 10 முதல்பதிப்பு  ஆண்டு 2008
இரண்டாம் பதிப்பு 2010
வெளியீடு:ஆப்பிள் பப்ளிஷிங் இண்டர்நேஷனல் (பி) லிமிடெட். சென்னை
--------------------------------
கல்லூரியில் எனது தமிழாசான் பேராசிரியர் முனைவர் மகாகவி அர.சிங்கார வடிவேலன்.
கண்டனூர்:
கற்பித்தேன் செந்தமிழைக் கற்றார் இவர்திறன்
மெய்ப்பிக்கும் வெண்பா விளக்கவுரை;--முற்புலவர்
பத்தாம் உரைக்குள் பரிமேல் அழகுரைபோல்
எத்திசையும் போற்றும் இனி.
நண்பர் தவத்திரு.அ.வே.சாந்திகுமார சுவாமிகள்:
"அருமை, எளிமை, அழகு கொண்ட திருக்குறளுக்கு மரபின் தொடர்ச்சியும்,புதுமையின் வளர்ச்சியும் இணைந்தே புதிய பொருள்நலம் காட்டும் முயற்சியின் விளைவே இந்நூல். இம்முயற்சியில் பாபா வெற்றி பெற்றிருக்கிறார் என்றால் மிகையாகாது."
---------
குறள் 1114
காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.
--------------
குவளை மலர்களால் காண முடிந்தால்
இவளது கண்களைப்போல் இங்கே--அழகிய
கண்கள் நமக்கில்லை என்றேதான் ஏங்கியே
மண்நோக்கி நிற்கும் தவித்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home