Thursday, October 31, 2019

2014 ஆம் ஆண்டு டில்லி சுற்றுலாப் பயணக் கவிதை:

தீன்மூர்த்தி பவன்
------------------------------------------

உலக அமைதிக்குப் பாடுபட்ட நேரு
வலம்வந்து நாளும் பரபரப்பாய் வாழ்ந்த
அழகான இல்லம் வரலாறாய் மாறி
வரவேற்று நிற்கிறதே இன்று.


இந்திராகாந்தி இல்லம்
------------------------------------------
உலக கவனத்தை இந்தியாவை நோக்கி
சுழலவைத்தார் இந்திரா காந்தி! தனது
உயிர்மெய்க் காப்பாளன் காலனாக மாறி
உயிர்பறித்தான்! பூச்செண்டை மண்ணிலே சாய்த்தான்!
தளிரோ கருகுதல்போல் வீழ்ந்து மடிந்தார்!
புவியே அழுததே அன்று.

மகாத்மா காந்தி நினைவிடம்!
----------------------------------------------------------
அன்னியர் பல்லாண்டு பாதுகாத்து ஒப்படைத்த
அண்னலை ஆறுமாதங் கூடஇங்கே காக்கவில்லை!
இந்தியன் சுட்டுக் கொன்றுவிட்டான் பாதகன்!
புன்னகை பூத்து வழிபாடு கூட்டத்தை
தன்னகம் பார்க்க நடந்துவந்த அண்ணலை
குண்டுகளால் தாக்கி அழித்தான் கொடியவன்!
கண்ணீர் ததும்பிநிற்க பார்த்தேன்! துடித்தேன்!
இன்னொரு காந்தி கிடைப்பாரா? ஏங்குகின்றேன்!
அண்ணலைப் போற்றி வணங்கு.

மதுரை பாபாராஜ்




0 Comments:

Post a Comment

<< Home