Friday, November 22, 2019

உவமைக் கவிஞர் சுரதா

உவமைக் கவிஞர் சுரதாவின் புகழ் வாழ்க!

பிறந்தநாள் வாழ்த்து 23.11.19

அகவை 99

சுப்புரத்ன தாசன் சுரதாவாய், பாவேந்தர்
நற்றமிழ்ப் பாவலரின் தாசனாக தன்பெயரை
இத்தரணி போற்றவே மாற்றினார் ஆர்வத்தில்!
எத்தனை நூல்கள் கவியரங்க மேடைகள்!
எத்தனைப் பேச்சுகள் பாத்தமிழ் வீச்சுகள்!
அத்தனையும் தேன்பலா போன்ற சுளைகளே!
கற்றறிந்தோர் போற்றும் உவமைகள் நாடிவரும்!
எத்தனை பட்டம் விருதுகள் பெற்றார்
முத்தான எங்கள்உவமைக் கவிஞர்தான்!
பற்றுடன் வாழ்த்துவோம் பல்லாண்டு வாழியவே!
எப்பொழுதும் போற்றுவோம் சூழ்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home