Saturday, November 23, 2019

 தெய்வத்திரு. வி என் சிதம்பரம் அய்யா!

நினைவுநாள் 24.11.19

விருந்தோம்பல் என்றால் சிதம்பரம் அய்யா!
கருத்துடன் நட்பு மணக்கப் பழகுவார்!
பெருந்தன்மைப் பண்பின் எடுத்துக் காட்டு!
செருக்கற்ற செம்மல் இவர்.

உயரமான உள்ளம்! உயர்ந்த மனிதர்!
தரமான நற்பண்பின் நாயகன் ஆவார்!
முயற்சி உழைப்பால் சிறப்பில் மிளிர்ந்தார்!
வளர்தமிழ்போல் வாழ்க புகழ்.

அரவணைக்கும் பண்பிலே தென்றல்! நன்கு
பழகுவதில் அய்யா குழந்தை!  சிரித்துக்
கலகலப் பாகத் தமிழ்பேசும் சான்றோர்!
உளத்தால் வணங்குகிறேன் இன்று.

கமலா திரையரங்கில் கம்பீர மாக
தினமும் அரிமாபோல் நிற்கின்ற காட்சி
மனத்திரையில் வந்துவந்து தூண்டிவிட்டுப்  போகும்!
நினைவெல்லாம் அய்யாதான் பார்.

மறக்க முடியாத நட்பில் திளைத்தேன்!
மறந்தால் மனிதனல்ல! என்றும் நினைப்பேன்!
வடபழனி ஏந்தல் சிதம்பரம் அய்யா
இறவாப் புகழ்கொண்டார் இங்கு.

என்றும் நன்றியுடன்
மதுரை பாபாராஜ்
குடும்பத்தார்.

0 Comments:

Post a Comment

<< Home