Sunday, November 10, 2019

தூரத்துப் பச்சை!

தூரத்துப் பச்சைதான் கண்ணுக் கழகாகும்!
ஆர்வக்கோ ளாறில்  நெருங்கிப் பழகினால்
சோர்ந்திடுவோம்  உண்மை முகமறிந்தே! உள்ளத்தின்
ஈர்ப்பெல்லாம் மாயை உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home