Saturday, December 28, 2019

புதிதல்ல

புதிதல்ல இத்தகைய வாழ்வியல்!

பாத்திரத்திற் கேற்றாற்போல் தண்ணீர் வடிவத்தை
ஏற்கும் நிலைபோல இன்று குழந்தைகள்
அப்பாவும் அம்மாவும் வேலைபார்க்கும் சூழலுக்கே
அப்படியே மாறித்தான் வாழ்கின்றார் நாள்தோறும்!
இப்படித்தான் மாற்றம் உணர்.

அன்றும் இன்றும் என்றும்!

கட்டிடம், பள்ளி, விவசாயம், ஆலைகளில்
இத்தகைய வேலைக்கு ஆண்பெண் இருவரும்
பற்றுடன் சென்று பணிபுரிந்த கோலமுண்டு!
சுற்றத்தார் அன்னார் குழந்தைகளைப் பேணினார்!
எப்படியும் வாழ்விதுதான் இங்கு.

மதுரையில் அன்றுகண்ட காட்சி!

மதுரைமில் ஆலை! பகல்நேர வேலை!
குடும்பத்துப் பெண்கள்  அணியணி யாக
விறுவிறுப்பாகச் சென்றார்! குழந்தைகள் வீட்டில்
தனியாக அண்டைவீட்டார் பார்க்க வளர்ந்தார்!
தனிமனித தேவைக்கே வாழ்வு.

இன்று!

காலையில் போனால் இரவில் வருகின்றார்!
காலைமுதல் மாலைவரை பிள்ளைகள் வீட்டிலே!
தாத்தாவும் பாட்டியும் ஆயாவும் மாறிமாறி
ஏற்பார் பொறுப்புகளைத் தான்.

இருவர் வருமானம் வாழ்க்கையின் தேவை!
கருத்தாய்க் குழந்தைகள் இந்த நிலையைப்
புரிந்துகொண்டு நாளும் அனுசரித்து வாழும்
கலையறிந்தார் இங்கே உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home